Monday 20th of May 2024 03:30:38 AM GMT

LANGUAGE - TAMIL
.
பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இருந்து மற்றும் ஒரு இலங்கை வீரர் மாயம்!

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இருந்து மற்றும் ஒரு இலங்கை வீரர் மாயம்!


இங்கிலாந்தின் பேர்மிங்காமில் நடைபெறும் 22வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த மற்றும் ஒரு இலங்கையரும் காணாமல் போயுள்ளதாக அணி நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

இலங்கையின் மல்யுத்த அணியைச் சேர்ந்த வீரர் ஒருவரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன தடகள வீரர் எதிர்வரும் ஆகஸ்ட் 6 ஆம் திகதி மல்யுத்த போட்டியின் முதல் சுற்று போட்டியில் பங்கேற்க இருந்தார்.

முன்னதாக இலங்கை ஜூடோ வீரர் ஒருவரும் ஜூடோ அணியின் அதிகாரி ஒருவரும் காணாமல் போயிருந்தனர்.

காணாமல் போன மல்யுத்த வீரர் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் பொதுநலவாய விளையாட்டு மருத்துவ மையத்திற்கு மாற்றப்பட்டார் பின்னர் அவர் இரண்டாவது சீரற்ற சோதனையில் தேர்ச்சி பெற்ற பிறகு விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும் இலங்கை அணி நிர்வாகம் அவரை மையத்திலிருந்து அழைத்துச் செல்ல வந்தபோது​​தடகள வீரர் காணவில்லை.

இதனையடுத்து பொதுநலவாய விளையாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் காணாமல் போன இலங்கை தடகள வீரர் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE